தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஹெச்.எம்முக்கு கொலை மிரட்டல்

 

ஜெயங்கொண்டம், ஜூன் 27: ஜெயங்கொண்டம் அருகே ஹெச்.எம்முக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடத்தை சேர்ந்தவர் தமிழ்முருகன்(48). விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

காட்டாத்தூரை சேர்ந்த விசிக பிரமுகர்கள் பாக்கியராஜ்(35), வேல்முருகன்(49) ஆகியோர் கடந்த ஒரு வாரத்துக்கு முன் அரசு பள்ளிக்கு சென்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் தமிழ் முருகனிடம், வேல்முருகனின் மகனுக்கு பிளஸ் 1 வகுப்பில் குறிப்பிட்ட பாடப்பிரிவு கேட்டனர்.

அதற்கு நீங்கள் கேட்கும் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. வேறு ஏதாவது பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து தலைமை ஆசிரியர் தமிழ் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசில் தமிழ்முருகன் கடந்த 20ம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த பாக்கியராஜ், வேல்முருகனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.