தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிக்குள் அத்துமீறி நுழைவதை தடுத்த தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்

 

Advertisement

திருத்தணி, ஜூன் 26: திருத்தணி அருகே புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புச்சிரெட்டிப்பள்ளி, தெக்களூர், கிருஷ்ணசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளி வேலை நேரத்தில் பள்ளிக்கு தொடர்பு இல்லாத 4 மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தனர். இதனைக் கண்ட பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், எஸ்ஐ குணசேகரன் மற்றும் போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். அதில், தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் ஒருவரும், திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் என்பதும், புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் அத்துமீறி சென்று தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News