தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூறாவளி காற்றுடன் சாரல் மழையால் பாதிப்பு

 

Advertisement

மஞ்சூர், ஜூன் 26: மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது.

மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த கன மழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண் சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் சூறாவளி காற்று மட்டும் தொடர்ந்து வீசியது.

இந்நிலையில் கடந்த 2 தினங்களாக காற்றுடன் மீண்டும் சாரல் மழை பெய்ய துவங்கியுள்ளது. இரவு பகலாக இடைவிடாமல் தொடர்ந்து சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இடையே இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி குந்தாவில் 20 மி.மீ மழை பெய்துள்ளனது. தொட்டக்கம்பை, பிக்கட்டி, எடக்காடு, எமரால்டு பகுதிகளில் சாரல் மழையுடன் சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலை தோட்டம் மற்றும் கூலி வேலைகளுக்கு செல்ல முடியாமல் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News