தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக்கடலில் உருவான ‘ரெமல்’ புயலால் மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்

 

Advertisement

மாமல்லபுரம், மே 27: வங்கக்கடலில் உருவான, ‘ரெமல்’ புயல் எதிரொலியால், மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் காணப்பட்டு வருகிறது. மத்தியகிழக்கு வங்ககடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘ரெமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது மேற்குவங்க மாநிலம் கேனிங்கிலிருந்து 390 கிமீ தூரத்தில் நிலை கொண்டிருப்பதாகவும், நேற்று இரவோ அல்லது இன்று அதிகாலையோ வங்காள விரிகுடா மற்றும் அதன் முக்கிய பகுதிகளான சாகர் தீவு - கோபுபுரா இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல், 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ‘ரெமல்’ புயல் எதிரொலி காரணமாக, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவனேரி, புதிய எடையூர் குப்பம், சலவான்குப்பம், பட்டிப்புலம் குப்பம், சூளேரிக்காடு, நெம்மேலி, புதிய கல்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி, பல மீட்டர் தூரம் முன்னோக்கி வந்து, கடற்கரை பகுதியை சூழ்ந்து, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

பலத்த கடல் சீற்றத்தால், வழக்கமாக கடற்கரையில் நடைபயிற்சி செய்பவர்கள், நடைபயிற்சி மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்தனர். மேலும், நேற்று காலை கடலில் குளிக்கலாம் என உற்சாகத்துடன வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காணமுடிந்தது. இந்த கடல் சீற்றத்தால், மீனவர்கள், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News