தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுவையில் தொடர்ந்து ஏமாறும் மக்கள் 6 பேரிடம் ரூ.33.49 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி, ஏப். 23: புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் 6 பேரிடம் ரூ.33.49 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகனை சென்ைனயை சேர்ந்த ஒருவர் தொடர்புகொண்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனைநம்பி பழனிசாமியின் மகன் ரூ.15.40 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அப்பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை, அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

Advertisement

இதேபோல் வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த கவுதமன் ரூ.50 ஆயிரம் இழந்துள்ளார். மேலும் ரெட்டியார்பாளையம் சேர்ந்த மானேகிரி என்பவரை மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் மூலம் தொடர்புகொண்டு வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனைநம்பி மானேகிரி ரூ.16.51 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதில் சம்பாதித்து பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

இதேபோல் கோர்டுகாடு பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவர் ரூ.28 ஆயிரமும், ஒயிட் டவுன் சேர்ந்த கவுசல்யா ரூ.66 ஆயிரமும் இழந்துள்ளார். மேரி உழவர்கரை சேர்ந்த மஞ்சிலி ரூ.14 ஆயிரம் இழந்துள்ளார். இவர்கள் மொத்தமாக ரூ.33.49 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தொடர்ந்து ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News