தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை

சென்னை, செப்.7: சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலக வளாகம் மற்றும் கார்கோ பிரிவில் சுங்கத்துறை பணியாளர்கள் சிலர் சமீபகாலங்களாக பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பயன்படுத்துகிறவர்கள் ஆங்காங்கே எச்சில்கள் உமிழ்ந்து, சுற்றுப்புற சூழ்நிலையை பாதிக்கும் விதத்தில் செயல்படுவதாகவும், சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்தபோது பான்பராக், குட்கா, ஹான்ஸ் மற்றும் வெளிநாட்டு மது வகைகள், சிகரெட்கள் சுங்கத்துறை வளாகங்களில் அதிக அளவு பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, சுங்கத்துறை அலுவலக வளாகத்திற்குள் பான்பராக், குட்கா, ஹான்ஸ், சிகரெட் மற்றும் ஆல்கஹால் பணி நேரங்களில் சிலர் பயன்படுத்துவதாகவும், அதனால் பல ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இது அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகள் சட்டம் 1964க்கு எதிரானது.

Advertisement

மேலும் அலுவலக வளாகத்திற்குள் இதுபோல் பயன்படுத்துவதால், அதனால் பல்வேறு நோய் தோற்று கிருமிகள் பரவி, அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அரசு ஊழியர்கள் பணி நேரத்தின் போது, நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான, சட்ட விதிமுறைகள், 1984 ஆண்டில், ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு இவைகளை கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதுதவிர அலுவலக வளாகங்களில் பணி நேரங்களில் புகை பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாக, 2008ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனவே விமான நிலைய சுங்கத்துறை அலுவலகம், விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள ஏர் கார்கோ அலுவலகங்களில், பணியாற்றுபவர்கள் இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என சுங்கத்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.

Advertisement

Related News