தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை

திண்டிவனம், செப். 30: திண்டிவனம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமம் கவுசல்யா நகர் பகுதியை சேர்ந்தவர் தனசெல்வி (56). இவர் வீடூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக உள்ளதால் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டில் சென்று தூங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

Advertisement

தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 14 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனசெல்வி, ரோசனை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் வீட்டை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Related News