தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உல்லாசமாக இருந்துவிட்டு காதலியை ஏமாற்றிய வாலிபர் வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து

பாகூர், ஆக. 30: கிருமாம்பாக்கம் அடுத்த கடற்கரை கிராமத்தை சேர்ந்த 22 வயதுள்ள ஒரு பெண்ணும் நரம்பை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2022 அக்டோபர் மாதம் புதுச்சேரி கடற்கரை அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜூக்கு மணிகண்டன் அந்த பெண்ணை அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அதன்பிறகு, இவர்கள் அடிக்கடி பலமுறை தனிமையில் சந்தித்து வந்துள்ளனராம்.

Advertisement

இந்நிலையில், மணிகண்டன் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டாராம். அதன் பிறகு இருவரும் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மணிகண்டன் அந்த பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் எவ்வளவு பவுன் போடுவார்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து வந்த மணிகண்டனிடம் பாதிக்கப்பட்ட பெண் பேச முயற்சித்துள்ளார். அவர் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். கடந்த திங்கட்கிழமை அன்று மணிகண்டனுக்கும் நிச்சயதார்த்தம் செய்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளதாக தெரிகிறது. மேலும் நேற்று அவர்களுக்கு நரம்பை கோயிலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதனை அறிந்த பாதிக்கப்பட்ட பெண் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை தவறாக நடந்து கொண்ட மணிகண்டன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார், மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் நேற்று நடக்க இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது. இச்சம்பவம் நரம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News