தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு மேம்பாலத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

மயிலம், ஆக. 29: மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு மேம்பாலத்தில் பின்னோக்கி இயக்கப்பட்ட அரசு பேருந்தின் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் மேம்பாலத்தின் மேலே சென்றதால் கூட்டேரிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பயணிகள் ஓட்டுநரிடம் சண்டையிட்டனர். இதனைத் தொடர்ந்து மேம்பாலத்தின் அருகே செல்லும் சாலையில் செல்வதற்காக ஓட்டுநர் மேம்பாலத்தில் இருந்து பேருந்தை பின்னோக்கி அலட்சியமாக இயக்கியுள்ளார். இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரிடமும் சரமாரியாக கேள்வி எழுப்பி சண்டையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News