தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு நள்ளிரவில் மண்டை ஓடு பொம்மை வைத்து மாந்திரீக பூஜை வழிபாடு

உளுந்தூர்பேட்டை, ஆக. 29: உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் நடந்த மாந்திரீக பூஜை வழிபாட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்னை சத்யா பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய சந்திப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் மண்டை ஓடு மற்றும் துணியால் ஆன பொம்மை வைத்து மாந்திரீக பூஜை வழிபாடு செய்துள்ளனர். நேற்று காலை இந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்துவிட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மண்டை ஓடு மற்றும் மாந்திரீக பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள சந்திப்பு பகுதியில் மண்டை ஓடு வைத்து அதில் உருவத்துடன் கூடிய துணியால் ஆன பொம்மை செய்து அந்த மண்டை ஓட்டிற்கு மாலை அணிவித்தும், இரண்டு புறங்களில் பூசணிக்காயை அறுத்து வைத்தும், வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி உள்ளனர். மேலும் அந்த மண்டை ஓடு மற்றும் பொம்மையை சுற்றி மஞ்சள், குங்குமம் கொட்டி கிடந்தது.

Advertisement

Advertisement

Related News