மது குடிக்க பணம் தராத மனைவி மண்டை உடைப்பு கணவருக்கு போலீஸ் வலை
விழுப்புரம், செப். 25: விழுப்புரம் அருகே மது குடிக்க பணம் தராத மனைவி மண்டையை உடைத்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(40). இவருக்கும், விழுப்புரம் கா.குப்பம் பகுதியைச் சேர்ந்த பொன்மலர்(30) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். இந்நிலையில் பொன்மலர் தனது தாய் வீடான கா.குப்பத்தில் வந்து தங்கி உள்ளார். நேற்று கார்த்திகேயன் மாமியார் வீட்டுக்கு வந்து தனது மனைவி பொன்மலரிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் அங்கிருந்த ரப்பர் பட்டையால் சரமாரியாக பொன்மலரை தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தாலுகா காவல்நிலைய போலீசார் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.