தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருவேப்பிலங்குறிச்சி அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் வாலிபர் சடலம் கொலையா? போலீசார் விசாரணை

விருத்தாசலம், செப். 24: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசங்கு மகன் ராமராஜன்(19). இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்னையின் காரணமாக பெற்றோர் வெளியூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த நிலையில் ராமராஜன் மட்டும் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை உறவினர் ஒருவர் ராமராஜன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் ராமராஜன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த உறவினர் கத்தி, கூச்சல் போட்டதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சென்று ராமராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது தந்தை தனசங்கு, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமராஜன் பின்புறம் கைகள் கட்டிய நிலையில் தூக்கில் தொங்கியதால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement