தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மங்கலம்பேட்டை அருகே சோகம் வீடு தீ பிடித்து எரிந்து மாற்றுத்திறனாளி கருகி பலி

மங்கலம்பேட்டை, நவ. 22: மங்கலம்பேட்டை அருகே வீடு தீப்பிடித்து எரிந்து மாற்றுத்திறனாளி கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே எடசித்தூர் கிராமத்தில் பட்டியலின மக்களின் குலதெய்வமான இருசாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் அழகேசன் (50) என்கிற மாற்றுத்திறனாளி கூரை வீடு கட்டி தங்கி வசித்து வந்தார். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை மாற்றுத்திறனாளி அழகேசன் தங்கி இருந்த கூரை வீடு, திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட அழகேசன் வெளியே வரமுடியாமல் தீயில் எரிந்து கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

Advertisement

அவரது வீட்டிற்கு அருகாமையில் யாரும் இல்லாதததால் தீயை அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டு அழகேசன் எரிந்து கருகினார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மங்கலம்பேட்டை காவல்துறையினர் உயிரிழந்த அழகேசன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீடு தீப்பிடித்து எரிந்து மாற்றுத்திறனாளி கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement