தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி இ-சலான், பிரதம யோஜனா செயலி அனுப்பி நூதன முறையில் 8 பேரிடம் ரூ.9.56 லட்சம் மோசடி

புதுச்சேரி, நவ. 22: போலி இ-சலான், பிரதம யோஜனா செயலி அனுப்பி, புதுச்சேரியில் பெண்கள் உட்பட 8 பேரிடம் ரூ.9.56 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவரை, மர்ம நபர்கள் அவரது பங்குசந்தை குரூப்பில் இணைந்து, எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி, மேற்கூறிய நபரும் மர்ம நபர்கள் அனுப்பிய லிங்கில் பல்வேறு தவணைகளில் ரூ.5.95 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதில், அவர் சம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

Advertisement

தொடர்ந்து, முத்தியால்பேட்டை சேர்ந்த ஆண் நபர் முகநூலில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் ரூ.85 ஆயிரத்துக்கு டி.வி. ஆர்டர் செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.ரெட்டியார்பாளையம் சேர்ந்த ஆண் நபர் போலியான செயலியை பதிவிறக்கம் செய்து சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.24 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது.மேலும், முதலியார்பேட்டை சேர்ந்த ஆண் நபர் போலி இ-சலான் செயலி பதிவிறக்கம் செய்து ரூ.73 ஆயிரமும், நெல்லித்தோப்பு சேர்ந்த நபர் ரூ.62 ஆயிரமும், சண்முகாபுரத்தை சேர்ந்த ஆண் நபர் ரூ.55 ஆயிரமும், துப்ராயப்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.37 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த பெண் ரூ.25 ஆயிரம் என மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மேற்கூறிய 8 பேர் மொத்தமாக ரூ.9.56 லட்சத்தை மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement