தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலாப்பட்டு, கோட்டக்குப்பம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

காலாப்பட்டு, நவ. 21: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழி தாக்குதல் நடந்ததை அடுத்து, கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக சாகர் கவாச் மற்றும் ஆபரேஷன் ஆம்லா போன்ற தலைப்புகளில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆண்டிற்கு 2 முறை இது போன்று பாதுகாப்பு ஒத்திகை நாடு முழுவதும் உள்ள கடலோர பகுதியில் நடத்தப்படும். காவல் துறையினரே மாறு வேடத்தில் கடற்பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் நுழைவார்கள். அவர்களை போலீசார் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடப்பதை முறியடிப்பது போன்றவைகள் இந்த பாதுகாப்பு ஒத்திகைகளில் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை நேற்று, புதுச்சேரி- சென்னை கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு, கோட்டக்குப்பம், தந்திரயான்குப்பம், சின்ன முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் கடலோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.

Advertisement

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையை அடுத்து, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழக வாயில், மத்திய பல்கலைக்கழகம் வாயில்களில் புதுச்சேரி கமாண்டோ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கடலோர பகுதிகளான பிள்ளைச்சாவடி, சின்னக்காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் மற்றும் தமிழக பகுதியான சோதனைகுப்பம், நடுக்குப்பம், தந்திரயான்குப்பம், சின்ன முதலியார்சாவடிகுப்பம், ஆரோ பீச், பொம்மையார்பாளையம் ஆகிய கடலோர பகுதிகளில் தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

Advertisement