தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருபுவனையில் பரபரப்பு ரெஸ்டோ பார் திறப்புக்கு எதிர்ப்பு தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்

திருபுவனை, நவ. 19: புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை மையப்பகுதியாக உள்ளது. இங்குள்ள சர்வீஸ் சாலையில் 2 மதுபான கடைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேம்பாலம் அருகில் புதிதாக ரெஸ்டோ பார் ஒன்று திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விசிக, தவெக உள்ளிட்ட கட்சியினர் ஒன்றுசேர்ந்து, அப்பகுதியில் புதிதாக ரெஸ்டோ பார் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்குவழி சாலையில் இந்திராநகர் துணை மின்நிலையம் அருகே கொட்டும் மழையிலும் பொதுமக்கள் குடைகளை பிடித்தவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருபுவனை பகுதிகளில் ரெஸ்டோ பார்கள், மதுபான கடைகள் அமைத்தால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும், சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும் எனக்கூறி அவர்கள் கோஷமிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருபுவனை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி நான்குவழி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement