தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் சோனாங்குப்பத்தில் ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினர் வாக்குவாதம்

கடலூர், ஆக. 19: கடலூர் அருகே மீனவ கிராமமான சோனாங்குப்பத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊர் மக்கள் ஒன்று கூடி ஊர் தலைவரை தேர்ந்தெடுத்து ஊர் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஏற்கனவே உள்ள ஊர் தலைவர் பதவி முடிவடைந்தநிலையில் ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதனால் காவல்துறை முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி ஊர் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று சோனாங்குப்பத்தில் உள்ள பெருமாள் கோயிலில் 300க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடினர். அப்போது ஏற்கனவே உள்ள நிர்வாகத்தினரே தொடர வேண்டும் என ஒரு தரப்பினரும், நடைமுறையில் உள்ளபடி ஒவ்வொரு ஆண்டும் புது தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கூறினர். இதனால் பிரச்னை ஏற்பட்டு காவல்துறை முன்னிலையில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் ஒன்று கூடிய அனைத்து கிராம மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News