தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருடிய மோட்டார் சைக்கிள்களை அடகு வைத்த 2 பேர் கைது

விருத்தாசலம், நவ. 18: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தீவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் அஜித் (29). அதே பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் அபிஷேக் (25). அபிஷேக், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழநல்லூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண்குமார் (36) என்பவரை தனது நண்பர் என்று அறிமுகப்படுத்தி அவருக்கு அவசரத் தேவையாக ரூ.ஐந்தாயிரம் பணம் தேவைப்படுகிறது. அதனால் அருண்குமாருடைய மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு பணம் கொடுக்கும் படி அஜித்திடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அஜித் ரூ.4 ஆயிரத்து 500 பணம் கொடுத்துவிட்டு, மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொண்டு ஆர்சி புக்கினை கேட்டுள்ளார்.

Advertisement

செல்போனில் படம் எடுத்து அனுப்புவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றவர்கள், மீண்டும் மற்றொரு மோட்டார் சைக்கிளை அஜித்திடம் கொடுத்து இதனையும் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அஜித் அது திருட்டு வாகனமாக இருக்குமோ என எண்ணி மோட்டார் சைக்கிள்களையும் அருண்குமார், அபிஷேக் ஆகிய இருவரையும் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தியபோது அது திருடி வந்து விற்க முயன்ற மோட்டார் சைக்கிள் என்பது உறுதியானது. அதனை தொடர்ந்து அருண்குமார், அபிஷேக் ஆகிய இருவர மீதும் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்து, மோட்டார் சைக்கிள்கள் எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News