தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெண்ணெய்நல்லூர் அருகே முட்டை லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்

திருவெண்ணெய்நல்லூர், செப். 17: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த ஆண் சடலத்தை ஏற்றிக்கொண்டு நேற்று தூத்துக்குடி மாவட்டம் கூழாமூர் கிராமத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் சென்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சத்துணவு முட்டைகளை இறக்கிவிட்டு நாமக்கல் நோக்கி சென்ற லாரி மீது திடீரென ஆம்புலன்ஸ் மோதியது. இதில் ஆம்புலன்சில் வந்த தனம், தேன், கல்யாணசுந்தரம், தேவேந்திரன், மாணிக்கம், கண்டாச்சிபுரம் அடுத்த பரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சென்னையில் இருந்து வந்த சடலத்தை மீட்டு வேறு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தினால் சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

 

 

Advertisement