தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பகுதிநேர வேலை, ஆன்லைன் டிரேடிங் எனக்கூறி 3 பெண்கள் உள்பட 6 பேரிடம் ரூ.19.34 லட்சம் மோசடி

புதுச்சேரி, செப். 17: ஆன்லைனில் பகுதிநேர வேலை, ஆன்லைன் டிரேடிங் எனக்கூறி 3 பெண்கள் உள்பட 6 பேரிடம் ரூ.19.35 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபரை அறிமுகம் இல்லாத நபர் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என அவர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ஆண் நபர், மர்ம நபர் கூறியபடி ரூ.16.33 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அதற்கான வருமானம் கிடைக்கவில்லை. செலுத்திய தொகையையும் அவரால் திரும்பப்பெற முடியவில்ைல. அதன்பிறகே அவருக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.இதேபோல், ஆன்லைனில் வீட்டில் இருந்தவாறே பகுதிநேர வேலை மூலமாக அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.17,500ம், எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த ஆண் நபரிடம் ரூ.2.46 லட்சமும், வாணரப்பேட்டையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.5,900ம் மோசடி செய்துள்ளனர். அதேபோன்று, கேரளா லாட்டரி ஏஜெண்ட் எனக்கூறி எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த ஆண் நபரிடம் ரூ.29,850ஐ மோசடி செய்துள்ளனர். லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த இளம்பெண், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ.1,399க்கு ஆடைகள் ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News