தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில்வே மேம்பால பணி காரணமாக புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தடை அமல்

புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி மில் ரயில்வே கேட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் ரூ.72 கோடியில் இருவழி சாலை ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி பூமிபூஜை செய்து பணிகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். ஆனால், ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வந்ததால், உடனடியாக பணிகள் துவங்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டது.

Advertisement

இந்நிலையில் கடந்த மே மாதம் புதுச்சேரி பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. பின்னர், புதுச்சேரி-கடலூர் சாலையில் ஏஎப்டி மில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி தொடங்கியது.இந்நிலையில், மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, புதுச்சேரி- கடலூர் சாலையில் முழுமையாக வாகனங்களை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்து இருப்பதாக கிழக்கு போக்குவரத்து போலீசார் அறிவித்தனர். அதன்படி, நேற்று காலை 10 மணியளவில் சிங்காரவேலர் சிலை அருகே ரோடியர் மில் செல்லும் சாலையின் இரு வழியிலும் போக்குவரத்து போலீசார் பேரிகார்டு வைத்து அடைத்தனர். மேலும், புதுச்சேரி நீதிமன்றத்துக்கு செல்ல ஒருவழியில் மட்டும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

Advertisement