தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூரில் ஆன்லைன் லாட்டரி விற்ற பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது

கடலூர், அக். 14: கடலூரில் ஆன்லைன் லாட்டரி விற்ற பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.22.94 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையில் போலீசார், மஞ்சக்குப்பம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த குண்டு உப்பலவாடி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (62), அவரது மனைவி மல்லிகா (55), மகன் சாரதி (29), புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (44) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.22 லட்சத்து 94 ஆயிரத்து 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராமன் மீது 18 லாட்டரி வழக்குகளும், பிரகாஷ் மீது 3 லாட்டரி வழக்குகளும் உள்ளன. பிரகாஷ் கடலூர் பாஜக நெசவாளர் அணி நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement