தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

திருக்கோவிலூர், அக். 13: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவரது மகன் எத்திராஜன்(15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisement

இந்நிலையில் நேற்று காலை எத்திராஜன் தனது நண்பர்களுடன் திருவரங்கம் பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, அப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தனர். சிறிது நேரத்தில் எதிர்பாராதவிதமாக எத்திராஜன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கோவிலூர் அடுத்த ஆவியூர் கிராமத்தில் உள்ள பெண்ணை ஆற்றின் ஓரத்தில் சடலம் ஒன்று ஒதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர், போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட எத்திராஜன் என தெரியவந்தது. இதையடுத்து எத்திராஜன் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Advertisement

Related News