அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
திருக்கோவிலூர், செப். 13: திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் உட்லை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவரை எழுப்ப முற்பட்டபோது எந்தவித அசைவும் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருக்கோவிலூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் யார் என்ற அடையாளம் தெரியாத காரணத்தால் திருக்கோவிலூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.