பெண் மாயம்
புவனகிரி, நவ. 11: புதுச்சத்திரம் அருகே உள்ள சிலம்பிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சந்தியா(26). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புவனகிரி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதனால் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சந்தியா கிடைக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து அவரது கணவர் ஜெயராமன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement