தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறைந்த விலையில் கார் விற்பனை ெசய்வதாக பண மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது

கடலூர், அக். 10: கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 4ம் தேதி முகநூலில், குறைந்த விலைக்கு கார் விற்பனைக்கு உள்ளதாக இருந்த விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரமேஷ் என்ற நபரிடம் பேசி உள்ளார். அப்போது ரூ.3 லட்சத்திற்கு எக்ஸ்யூவி கார் விலைக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனை நம்பி முன்பணமாக 6 தவணைகளாக ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் பணத்தை ரமேஷிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ரமேஷ், காரை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

Advertisement

இது குறித்து கடலூர் கடலூர் இணைய வழி குற்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முகநூலில் விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டவர் நாகப்பட்டினம் கோட்டைமேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் ரமேஷ் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு கியூபன் பார்க் அருகே பதுங்கியிருந்த ரமேஷை கடலூர் இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கடலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும், என்றார்.

Advertisement

Related News