தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செஞ்சி அருகே 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது

செஞ்சி, ஆக.8: விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செஞ்சி தாலுகா நரசிங்கராயப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது செஞ்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி சத்துணவுக் கூடங்கள் மற்றும் காலை உணவு திட்டத்திற்கு தேவையான ரேஷன் அரிசி விநியோகிக்கும் மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பட்டியலில் கண்ட இடங்களில் விநியோகம் முடித்து கூடுதலாக 30 சாக்கு பைகளில் 50 கிலோ வீதம் 1500 கிலோ அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் விநியோகிக்கும் ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 30 முதல் 50 கிலோ வரை சேகரித்து மொத்தமாக செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஹோட்டல் கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்திய அந்த வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முத்துக்குமார் (34), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சோழபூண்டி ராமையன் மகன் அரவிந்தன் (22), செஞ்சி மேலச்சேரி லோடுமேன்கள் சர்க்கரை மகன் ராஜு (42), செஞ்சி மேலச்சேரி ரத்தினம் மகன் கண்ணதாசன் (59) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.