தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தியாகதுருகம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

தியாகதுருகம், அக். 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி கிரிவலம் செல்வதற்காக தனியார் வேனில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சென்றனர். அப்போது தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க வேனை ஓட்டுநர் வளைத்துள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைத்தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே அருகில் இருந்தவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த சுமார் 20க்கும் மேற்பட்டோரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையான போலீசார், சாலையில் குறுக்கே கவிழ்ந்த கிடந்த வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விசாரணையில், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திகேயன் (31) என்பவர் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement