தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10ம் வகுப்பு மாணவன் மாயம்

பாகூர், டிச. 6: கடலூர் மாவட்டம் புதுக்கடையை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-வளர்மதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். ஆறுமுகம் இறந்து விட்ட நிலையில், வளர்மதியால் தனது 3 பிள்ளைகளையும் கவனிக்க முடியவில்லை. இதனால் குழந்தைகள் நலக்குழு உதவியின் மூலமாக, 3 பிள்ளைகளையும் பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் குழந்தைகளை இல்லத்தில் சேர்த்து விட்டார். அங்கு 3 பேரும் தங்கி, பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். 2வது மகன் தொல்காப்பியன் (14), பாகூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மாலை 4.30 மணியளவில் ஆட்டோ ஓட்டுநர் தொல்காப்பியனை அழைத்து வர பள்ளிக்கு சென்றார்.

Advertisement

ஆனால் தொல்காப்பியன் பள்ளியில் இல்லை. உடனே இதுபற்றி தனியார் பாதுகாப்பு இல்லத்தின் நிர்வாகி கோகுலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த அவர், பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, மாணவன் தொல்காப்பியன் பள்ளி முடிந்து 4.30 மணிக்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர், மாணவனின் சொந்த ஊரான புதுக்கடை உள்ளிட்ட அவரது நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர், பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான பள்ளி மாணவனை தேடி வருகின்றனர்.

Advertisement