தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் செயலியில் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

கடலூர், ஆக. 6: கடலூர் மாவட்டம் கீழ் ஒரத்தூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்(21). இவர் ஆன்லைன் செயலியில் பழைய இருசக்கர வாகனம் விற்பனைக்கு இருப்பதாக இருந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூ.12500 கொடுத்தால் இருசக்கர வாகனத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய வசந்தகுமார், அந்த நபருக்கு ஆன்லைன் மூலம் ரூ.12,500 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்று கொண்டதும் அந்த நபர், இருசக்கர வாகனத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதேபோல முஷ்ணம், குணமங்கலம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (27) என்பவர் ரூ.15,800, குறிஞ்சிப்பாடி வடக்குத்து பகுதியை சேர்ந்த சக்திவேல் (24) என்பவர் ரூ.15 ஆயிரத்தை இந்த நபருக்கு அனுப்பி ஏமாந்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும், கடலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆன்லைன் செயலி மூலம் மோசடியில் ஈடுபட்டது கடலூரை சேர்ந்த வெற்றிவேல் (35) என்பது தெரிந்தது. இதையடுத்த அவரை கடந்த மே மாதம் 4ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் வெற்றிவேலுக்கு உடந்தையாக இருந்த சென்னை அகத்தியர் நகரை சேர்ந்த மைக்கேல்ராஜ் (39) என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement