தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளிமலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் காட்டெருமைகள்

கல்வராயன்மலை, ஆக. 5: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 177 மலை கிராமங்களும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கல்வராயன் மலைப்பகுதி முழுவதும் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இங்குள்ள மலை பாதையில் இரவு நேரங்களில் காடுகளில் உள்ள காட்டெருமைகள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால், அப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிமலையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி செல்லும் சாலையில், நேற்று முன்தினம் இரவு காட்டெருமை ஒன்று சாலையில் படுத்து கிடந்தது. அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் இதனை பார்த்து சுதாரித்து கொண்டு தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டனர். இதனையடுத்து வாகன ஓட்டிகள் சத்தம் எழுப்பியதை அடுத்து அந்த காட்டெருமை சாலையை கடந்து காட்டுக்குள் சென்றது. இதனிடையே மலைப்பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாகவும், மெதுவாகவும் செல்லுமாறு வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement