தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரைக்காலில் துணிகரம் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை

காரைக்கால், டிச. 3: காரைக்கால் நகர பகுதி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள எம்ஜி.நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன். தனியார் பள்ளி ஆசிரியர். தனது 3 மாத குழந்தையை பார்க்க கடந்த வெள்ளியன்று வீட்டை பூட்டிவிட்டு, மனைவி வீட்டுக்கு கும்பகோணம் சென்றார். தொடர்ந்து, விடுமுறை முடிந்து நேற்று காலை பணிக்கு திரும்பி வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. மேலும், இதே கும்பல் அந்த வீட்டின் பின்புறம் உள்ள மற்றொரு வீட்டிலும் திருட முயற்சி நடந்துள்ளது. இது குறித்து ஆசிரியர் நாகராஜன், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தெற்கு எஸ்பி சுபம் கோஷ் மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள், தனிப்படை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகரப் பகுதியில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Related News