தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முஷ்ணம் அருகே சோகம் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

முஷ்ணம், டிச. 2: முஷ்ணம் அருகே வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி ஊராட்சியை சேர்ந்தவர் பழனி. மெக்கானிக். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு திருமணம் நடந்து 6 ஆண்டு ஆகிறது. சாய் லோகேஷ் (4), சாய்ரக்க்ஷன் என்கிற ஒன்றரை வயது குழந்தை உள்ளனர். பழனி கடந்த ஞாயிற்று கிழமை சபரிமலைக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று காலை தீபா அருகில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் சென்று விட்டு வீடு திரும்பினார். இதையடுத்து வீட்டில் குழந்ைதகளை விட்டுவிட்டு உள்ளே சென்றார்.

Advertisement

பின்னர் வந்து பார்த்த போது 2 குழந்தைகளையும் காணவில்லை.அதிர்ச்சியடைந்த தீபா அப்பகுதியில் உள்ள புத்தேரி வடிகால் வாய்க்காலில் சென்று தேடியுள்ளார். இதில் சாய் லோகேஷ் மட்டும் இருந்துள்ளார். சாய்ரக்க்ஷனை காணவில்லை. அவர் வாய்க்காலில் தவறி விழுந்ததாக கூறி முஷ்ணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வாய்க்காலில் இறங்கி தேடியபோது அப்பகுதியில் உள்ள புதரில் சாய்ரக்க்ஷன் கிடந்துள்ளான்.

பின்னர் குழந்தையை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தீபா சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வடிகால் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement