தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாட்ஸ்-அப் குழு உருவாக்கி காதலியின் திருமணத்தை நிறுத்திய காதலன் கைது

தியாகதுருகம், நவ.1: தியாகதுருகம் அருகே காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த விளக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் சதீஷ்(21). அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகள் பவித்ரா. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பவித்ராவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் பவித்ரா சதீஷிடம் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு பவித்ராவின் தந்தை ஏழுமலை மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது மகள் பவித்ராவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை நிச்சயிக்கப்பட்டு திருமணப் பத்திரிகைகளை தனது உறவினர்களிடம் பவித்ராவின் தந்தை ஏழுமலை கொடுத்து வந்துள்ளார். இதை அறிந்துகொண்ட சதீஷ் சமூக வலைத்தளத்தில் வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

Advertisement

அதில் பவித்ராவின் உறவினர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து அந்தக் குழுவில் நானும் பவித்ராவும் காதலித்து வருகிறோம். ஆனால், அதற்கு பவித்ராவின் தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பவித்ராவிற்கு அவசரமாக திருமண ஏற்பாடு நடைபெற்று வருவதாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் சதீஷ் பவித்ராவும் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களையும் அந்தக் குழுவில் அனுப்பியுள்ளார். இந்த தகவல் மாப்பிள்ளை வீட்டிற்கு தெரியவரவே பவித்ராவின் தந்தை ஏழுமலையிடம் மாப்பிள்ளை வீட்டார் இந்த திருமணம் நடைபெறாது என்று தகராறு செய்து திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பவித்ரா தியாகதுருகம் காவல் நிலையத்தில் தனது திருமணத்தை நிறுத்திய சதீஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்ததன் பேரில் போலீசார் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement