தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் ராஜப்பா பூங்காவில் மக்கள் கூட்டம்: கல்லணை மணற்போக்கி வழியாக 2,166 கன அடி மழைநீர் செல்கிறது

திருக்காட்டுப்பள்ளி, மே 24: கல்லணை கொள்ளிடம் மணற்போக்கியில் 2,166 கன அடி மழைநீர் செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கரிகாலன் கட்டிய கல்லணை உள்ளது. சுற்றுலா தலமாகவும் உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்ததாலும் காவிரியில் தண்ணீர் இல்லாததாலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்தது. இதனால் கரிகாலன் பூங்கா, சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

Advertisement

இதனால் அங்குள்ள மீன் விற்போர், ஐஸ் மற்றும் பலகாரங்கள் விற்பனையும் வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் தவித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் பூமி குளிச்சியடைந்தது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், மற்ற மாவட்டங்களில் பெய்யும் மழையும், பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் அனைத்தும் காவியாற்றின் வழியாகவும், முக்கொம்பு என்னும் மேலணை வழியாகவும் மழைநீர் வந்து கல்லணை கொள்ளிடம் மணற்போக்கியில் நேற்று 2,166 கன அடி மழைநீர் செல்கின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

Advertisement

Related News