தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிரைம் செய்திகள் கொலை வழக்கு சாட்சியை மிரட்டியவர் கைது

கோவை, ஜூன் 18: கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சூர்யா (33). இவரது நண்பர் சேகர் (29). இவர்கள் இருவரும் கடந்த 2022ம் ஆண்டு உக்கடம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் பிஎன் புதூர் ரங்கே கவுண்டர் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (38) என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இருவருக்கும் எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்லி வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சூர்யாவுக்கும், பிரகாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சூர்யா தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என பிரகாசை தொடர்ந்து மிரட்டி வந்தார். இந்நிலையில், பிரகாஷ் உக்கடம் பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சூர்யா மற்றும் சேகர் ஆகியோர் மீண்டும் அவரை மிரட்டினர். வாக்குவாதம் முற்றியதில் இருவரும் கத்தியை காட்டி தங்களுக்கு எதிராக செயல்பட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுகுறித்து பிரகாஷ் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சாட்சியை மிரட்டிய சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சேகர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement