தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

₹2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

சேந்தமங்கலம், மே 22: புதன்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது. ₹2.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும் சந்தையில் மாடுகளை வாங்க -விற்க ஆந்திரா மற்றும் கர்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், உள்ளூர் விவசாயிகளும், வியாபாரிகளும் வருவர். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். தொடர் மழையின் காரணமாக நேற்று கூடிய சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து விற்பனை மாடுகள் குறைந்த அளவே வந்திருந்தது.

Advertisement

அதே வேளையில், மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால், இறைச்சி மாடுகளின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, மாடுகளை வாங்க வெளி மாநில- மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். கேரளாவில் இறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளதால், அங்கிருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால், மாடுகளின் விலை உயர்ந்தது. இறைச்சி மாடுகள் ₹29 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ₹48 ஆயிரத்திற்கும், கன்றுக்குட்டிகள் ₹18 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆக மொத்தம் ₹2.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

Advertisement

Related News