தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதல் தம்பதியர் உயிர் தப்பினர்

 

Advertisement

தாராபுரம்,மே24: திண்டுக்கல் மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பிரதீப் (42). இவரது மனைவி பெரியநாயகி(35), தம்பதியர் மகன் சித்ரன், மகள் சைந்தவியுடன் நேற்று பழனி சென்று விட்டு மீண்டும் உறவினர் வீட்டுக்குச் செல்ல தங்களது காரில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச் சாலையில் தெக்கலூர் தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது ஸ்பீடு பிரேக் மீது பிரதீப் மெதுவாக காரை ஏற்றி உள்ளார். அப்போது இவர்கள் பின்னே வேகமாக வந்த லாரி காரின் மீது மோதியது.இதில் நிலை தடுமாறிய கார் வலதுபுற சாலையில் கவிழ்ந்து விழுந்தது. விபத்து நடந்த பின்னர் அங்கிருந்து லாரி டிரைவர் லாரியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பெரியநாயகிக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கார் மீது லாரி மோதிய அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News