தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்பாடியில் துணி வியாபாரம் செய்யும் பெண்ணிடம் இரட்டிப்பாக பணம் தருவதாக ₹55.55 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது

வேலூர், ஆக.10: காட்பாடியில் துணி வியாபாரம் செய்யும் பெண்ணிடம் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ₹55.55 லட்சம் மோசடி செய்த தம்பதியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் துணி வியாபாரமும், மாத சீட்டும் நடத்தி வருகிறார். இவரும் வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம் பூண்டி மேட்டு தெருவை சேர்ந்த உமாவும் நெருங்கிய நண்பர்கள். இதற்கிடையில் உமாவும், அவரது கணவர் பாலுவும் காட்பாடி தாராபடவேடு பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில் ரயில் நிலைய கான்ட்ராக்ட் எடுக்க உள்ளதாகவும், பெங்களூரில் புதிய ஓட்டல் ஆரம்பிக்க உள்ளதாகவும் மகாலட்சுமியிடம் தம்பதி கூறியுள்ளனர்.

Advertisement

மேலும் அதற்கு பணம் தேவைப்படுவதால், கொடுக்கும் பணத்தை இரண்டு மடங்காக திருப்பி கொடுப்பதாக கூறியுள்ளார். இதை நம்பி மகாலட்சுமி கடந்த 2022ம் ஆண்டு பணத்தை கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் நடத்தி வந்த மாத சீட்டிலும் பணத்தை எடுத்துள்ளார். மொத்தம் ₹55 லட்சத்து 55 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். மகாலட்சுமி பணம் கேட்டால் அவரை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி இதுகுறித்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் எஸ்பி மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் தம்பதி உமா(39), பாலு (41) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று காட்பாடியில் கைது செய்தனர்.

Advertisement