தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமங்கலம் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு கலந்தாய்வு துவக்கம்

திருமங்கலம், ஜூன்.11: திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியர் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.

Advertisement

முதல்நாளான நேற்று பி.எஸ்சி கணிதம் மற்றும் பி.ஏ ஆங்கிலம் ஆகிய இரண்டு துறை பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் லட்சுமி, கணிதவியல் துறை பேராசிரியர் ஹரிநாராயணன், வணிகவியல் கெளரவ விரிவுரையாளர் சின்னசாமி, தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் சுமதி ஆகியோர் மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களை சரி பார்த்து கலந்தாய்வினை நடத்தினர். அடுத்தகட்டமாக இன்று (ஜூன் 11) பி.காம் பாடத்திற்கும், நாளை பி.ஏ தமிழ் பாடத்திற்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி மாற்றுச்சான்றிதழ், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதிசான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் நன்நடத்தை சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வரவேண்டும் என, கல்லூரி முதல்வர் டாக்டர் லட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார். திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல் துறையில் 120 மாணவ, மாணவிகளும், கணிதத்தில் 60 மாணவ, மாணவிகளும் சேலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement