தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செம்பனார்கோயில் பகுதியில் பருத்தி பஞ்சு அறுவடை செய்யும் பணி தீவிரம்

செம்பனார்கோயில், ஜூன் 25: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், கிள்ளியூர், மாத்தூர், முக்கரும்பூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலச்சங்காடு, கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள், பருத்தி சாகுபடி செய்தனர். தற்போது பல்வேறு இடங்களில் பருத்தி அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.

Advertisement

இதனால் செம்பனார்கோயில் பகுதி விவசாயிகள், கடந்த சில நாட்களாக பருத்தியை அறுவடை செய்து வருகின்றனர். தற்போது அறுவடை செய்யப்படும் பருத்திக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் பருத்திக்கு உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் நடப்பாண்டு சாகுபடி செய்யப்பட்ட பருத்திக்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சரியான விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது திடீர் திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் பருத்தி பஞ்சு நனைந்து பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாக சாகுபடி செய்த செலவு தொகையாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மழைக்கு முன்னர் பருத்தி பஞ்சை தீவிரமாக அறுவடை செய்கிறோம் என்றனர்.

Advertisement