தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குவிண்டால் பருத்தி ₹7,196க்கு ஏலம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

திருவாரூர், ஆக. 2: திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் வணிக இயக்குனருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட புலிவலம் ஊராட்சியில் ரூ.40 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், ரூ.16 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியையும், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மணலி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் மணலி, சாத்தாங்குடி சாலை மேம்பாட்டு பணி நடைபெற்றுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

மேலும், மணலி ஊராட்சி பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் பொருட்களின் இருப்பு விவரம் குறித்த பதிவேடு, பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.குறும்பல் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், தண்டலச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய நிலையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை விரைவாகவும், உரிய தரத்துடனும் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, கலெக்டர் சாரு, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் இளஞ்சேரன், மன்னார்குடி ஆர்.டிஓ கீர்த்தனாமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மனோகர், தாசில்தார் காரல்மார்க்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெய்வநாயகி, தியாகராஜன், ஒன்றிய பொறியாளர் வேதநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News