தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் ஆய்வாளர், உதவியாளர் கைது

கடலூர், ஜூன் 8: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணை நகரை சேர்ந்தவர் செல்வம் (40). தச்சு தொழிலாளியான இவர், தனது வீட்டின் பின்புறம் மரப்பட்டறை ஒன்று அமைக்க முடிவு செய்தார். இதற்காக வரி நிர்ணயம் செய்வதற்காக கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் (55) செல்வத்தை அணுகி சொத்து வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் செல்வம் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து பாஸ்கர் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மூன்று தவணைகளாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

Advertisement

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.10,000 பணத்தை நேற்று மாலை செல்வம் கடலூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று வருவாய் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் வருவாய் உதவியாளர் லட்சுமணன் (45) ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரும் மயிலாடுதுறையை சேர்ந்தவருமான பாஸ்கர், உதவியாளர் லட்சுமணன் ஆகியோரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து வரி நிர்ணயம் செய்ய கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர், மற்றும் உதவியாளர் லஞ்சம் பெற்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News