தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடக்கு மண்டலம் பகுதியில் புதிய தார்ச்சாலையின் தரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

 

Advertisement

கோவை, மே 1: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி பிரதான சாலை சந்திப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார்.

இதேபோல், மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சந்திப்புகளில் ஒரு மண்டலத்திற்கு 10 எண்ணிக்கையில், 50 நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 4வது வார்டு சரவணம்பட்டி வண்ணாங்குட்டை சாலை மற்றும் 10-வது வார்டு அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக போடப்பட்டுள்ள தார்ச்சாலையின் தரத்தை நேரில் ஆய்வு செய்தார்.

சாலையோரம் இருபுறங்களிலும் தேங்கியுள்ள மண்ணை அகற்றி, சாலையை நல்ல முறையில் பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, 25-வது வார்டு காந்திமா நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் உந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், செயற்பொறியாளர் முருகேசன், உதவி கமிஷனர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சக்திவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement