தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுங்கான்கடை அருகே சமையல் தொழிலாளி தற்கொலை

திங்கள்சந்தை, அக்.2: நாகர்கோவில் சுங்கான்கடை அருகே உள்ள களியங்காடு வட்டபாறை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். அவரது மனைவி வசந்தகுமாரி (63). நெசவு தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், வெங்கடேசன் (36) என்ற மகனும் உண்டு. மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். வெங்கடேசனுக்கு திருமணம் ஆகவில்லை. சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் வேலை செய்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கழுத்தில் வலி ஏற்பட்டதால் ஊருக்கு வந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisement

இந்தநிலையில் கடந்த 28ம் தேதி வெங்கடேசன் அவரது தாயாருடன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அப்போது வெங்கடேசன் இரவு நேரங்களில் சரியாக தூங்காததால் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மனநல மருத்துவரை பார்த்து சிகிச்சை பெறவும் டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் இனி நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என்று புலம்பி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே இருதினங்களுக்கு முன் காலை வெங்கடேசன் வீட்டில் நைலான் சேலையில் தூங்கு மாட்டி இறந்து தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement