தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு

 

Advertisement

ஈரோடு, மே 21: காற்றும் மற்றும் மழை பாதிப்புகளால் ஏற்படும் மின்விபத்துகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுகிறது.

தவிர, வீடுகளுக்கான மின் இணைப்புகளிலும் பழுதுகள் ஏற்படுகின்றன. எனவே, மின் கம்பங்கள் விழுந்தாலோ, மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலோ அல்லது மின் வினியோகம் தடைபட்டிருந்தாலோ மின் வாரியம் தொடர்பான தகவலுக்கு பொதுமக்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதன்படி, புகார் அளிக்க ‘மின்னகம்” எண் - 94987 94987 ல் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், புகார்களை புகைப்படத்துடன் சேர்த்து அனுப்பிட வாட்ஸப் எண் 9445851912 ஐ பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News