தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.28 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

 

தூத்துக்குடி, ஜூன் 28: சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.28,212 வழங்க வேண்டுமென பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த மரிய விக்டோரியாள் ராணி, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக கடன் பெற்றிருந்தார். இதற்கான தவணையை செலுத்தும்போது ரெக்கவரி கட்டணம் சேர்த்துக் கட்டினால் தான் ரசீது கொடுக்கப்படும் என கூறியிருந்தனர்.

ஆனால் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி இதுபோன்ற சரத்துகள் இல்லையென விக்டோரியா கூறியும் இன்சூரன்ஸ் நிறுவனம் கேட்கவில்லை. இதனால் வேறு வழியின்றி இருமுறை ரெக்கவரி கட்டணத்தையும் சேர்த்து தவணையை செலுத்தியுள்ளார். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வழக்கறிஞர் மூலம் நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து ரெக்கவரி கட்டணமாக செலுத்தப்பட்ட ரூ.8,212, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு தொகை ரூ.10,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 என மொத்தம் ரூ.28,212ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லை என்றால் அத்தொகையை செலுத்தும் வரை ஆண்டு ஒன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.