தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை வளம் சீர்குலையாத வகையில் கட்டுமான பணிகள்

சென்னை, ஜூன் 6: ஜி ஸ்கொயர் குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறியதாவது: உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சமூக பொறுப்புடன் கூடிய வளர்ச்சியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் என்பது உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாக முன் வைக்கப்பட்டிருப்பது பொருத்தமானது. கட்டுமானத்துறை தொழிலில் ஈடுபட்டிருக்கும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களாக, பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிரான போரில் நாமும் பங்கேற்க வேண்டியது மிக அவசியம். இயற்கை வளத்தை சீர்குலைக்காத கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும். மூங்கிலைப் பயன்படுத்துவதும் இங்கு முறையாக பெறப்பட்ட மரப்பொருட்களை கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவதும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் மிக குறைந்த அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

Advertisement

அத்துடன் இவை நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்டவை இவற்றை வழக்கமான முறையில் பேக்கேஜ் செய்வதை குறைத்து, மறுசுழற்சி செய்யக்கூடிய எளிதில் மட்கும் தன்மையுள்ளவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும். இது சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும். எங்களது ஜி ஸ்கொயர் நிறுவனத்தில், இதுபோன்ற இயற்கை வளத்தைக் குலைக்காத கட்டுமான நடைமுறைகளை எங்களது தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்களில் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறோம். எங்களது பசுமைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, எங்களுடைய கட்டுமானப் திட்டங்களில் ஏற்கனவே 6.36 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோயம்புத்தூரில் உள்ள எங்கள் முதன்மையான திட்டமான செவன் ஹில்ஸ் திட்டத்தில் மேலும் 50,000 மரக்கன்றுகளை நடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News