தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தியாகி ஈஸ்வரனின் திருவுருவச்சிலை, மணிமண்டபம் கட்டும் பணிகள்

 

Advertisement

உடுமலை, ஜூலை 18: உடுமலை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் உடுமலை அரசு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நாளை (19-ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்துள்ளார்.சத்தியமங்கலம், ஜூலை 18: பவானிசாகரில் தியாகி ஈஸ்வரனின் திருவுருவச்சிலை, மணிமண்டபம் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

பவானிசாகர் அணை கட்ட காரணமாக இருந்த சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான ஈஸ்வரன். இவருக்கு திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, தியாகி ஈஸ்வரனுக்கு பவானிசாகரில் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் கட்டப்படும் என கடந்த 2022ம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், தியாகி ஈஸ்வரனுக்கு வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டும் பணிக்காக ரூ.3 கோடியே 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து, கடந்த 28.6.2023ல் கட்டுமான பணி தொடங்கியது. தற்போது கட்டுமான பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் தியாகி ஈஸ்வரனின் மணிமண்டபம் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், ஒப்பந்ததாரர் செல்வம், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News