தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊத்துக்கோட்டை அருகே பழங்குடியினர் தொகுப்பு வீடு கட்டும் பணி பாதியில் நிறுத்தம்: மீண்டும் தொடங்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை, ஜூலை 3: ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் ஊராட்சி குருபுரம் கிராமத்தில் மணல் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட தொகுப்பு வீடு கட்டும் பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் ஊராட்சி, வேம்பேடு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, அதே ஊராட்சியைச் சேர்ந்த குருபுரம் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கடந்த வருடம் 22 குடும்பங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ₹5 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, இப்பணிகளுக்கு அடித்தளம் மட்டுமே போடப்பட்டு, வீடுகள் கட்டும் பணிகள் பாதியிலேயே நிற்கிறது. இந்த, பணிகளை விரைந்து முடித்து தரவேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து, பழங்குடியின மக்கள் கூறுகையில், கடந்த வருடம் குருபுரம் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டுவதற்காக பணிகள் தொடங்கினோம். ஆனால், வீடுகள் கட்ட அடித்தளம் போடுவதற்கு சவுடு மண் தேவவைப்படுவதால், சவுடு மண் எடுப்பதற்கு ஊத்துக்கோட்டை தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை இம்மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், எங்கள் வீடுகள் கட்டும் பணியானது பாதியிலேயே நிற்கிறது. எனவே, சவுடு மண் இன்றி பாதியில் கிடப்பில் போடப்பட்ட வீடு கட்டும் பணிகளை, மீண்டும் தொடங்குவதற்கு கலெக்டர் உதவிட வேண்டும் என கூறினர்.

Advertisement